மின் வாரிய பதவிக்கு தமிழில் தேர்வு - மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 09, 2020

Comments:0

மின் வாரிய பதவிக்கு தமிழில் தேர்வு - மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'மின் கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் தேர்வு, தமிழிலும் நடத்தப்படும்' என, மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'இளநிலை உதவியாளர் பணியில், 500; மின் கணக்கீட்டாளர் பதவியில், 1,300 இடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக மின் வாரியம் அறிவித்தது. இந்த தேர்வில், 80 மதிப்பெண்களுக்கான கேள்விகள், ஆங்கிலத்தில் மட்டுமே இடம் பெறும் என்றும், தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சியினர் மற்றும் தேர்வர்கள், 'தமிழக மின் வாரிய பணிகளுக்கு, தமிழில் தான் தேர்வு நடத்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், ஆங்கிலத்துடன், தமிழிலும் தேர்வு நடத்தப்படும் என, மின் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. மின் வாரிய பணியமைப்பு பிரிவு, தலைமை இன்ஜினியர் சார்பில், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிக்கு, கணினி அடிப்படையிலான தேர்வு, ஆங்கில மொழியில் நடத்தப்படும் என, ஏற்கனவே தெரிவிக்கப் பட்டிருந்தது. தற்போது, தமிழ் வழியில் படித்தவர்களின் கோரிக்கையை பரிசீலித்து, அவர்களின் நலன் கருதி, தமிழ் மொழியிலும் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம், வரும், 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, www.tangedco.gov.in என்ற, இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிக்கை . அறிவிக்கை எண் . 01 | 2020 , நாள் 08 . 01 . 2020 மற்றும் அறிவிக்கை எண் . 03 / 2020 , நாள் 08 . 01 . 2020 | ஆகியவற்றில் அறிவிக்கப்பட்ட கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் / கணக்கு பதவிகளுக்கு | கணினி அடிப்படையிலான தேர்வு ஆங்கில மொழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது . தற்சமயம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் கோரிக்கையினை பரிசீலனை செய்து அவர்களின் நலன் கருதி மேற்கண்ட தேர்வினை தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் 23 . 03 . 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையத்தை பார்க்கவும் . தலைமைப் பொறியாளர் பணியமைப்பு
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews