கண்காணிப்பு வளையத்தில் TNPSC பயிற்சி மையங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 27, 2020

Comments:0

கண்காணிப்பு வளையத்தில் TNPSC பயிற்சி மையங்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி மையங்கள், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவற்றின் கண்காணிப்பு வளையத்தில் வந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை நேர்மையாக நடத்துவதற்கு, அனைத்து வகை நடவடிக்கைகளையும், டி.என்.பி.எஸ்.சி., எடுத்து வந்தது. ஆனால், சமீபகாலமாக போட்டி தேர்வுகளில், பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குரூப் - 4, குரூப் - 2 ஏ, குரூப் - 2, வி.ஏ.ஓ., உள்ளிட்ட தேர்வுகளில், இடைத்தரகர்கள் மற்றும் சில ஊழியர்களின் ஆதிக்கம் காரணமாக, 50க்கும் மேற்பட்டவர்கள், முறைகேடாக தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்து, 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், சர்ச்சைக்குரிய போட்டி தேர்வுகளில், இடைத்தரகர்களுக்கு வினாத்தாள் கசிந்து, அவர்கள் வினாத்தாள் தயாரிப்பு பட்டியலில் உள்ள ஆசிரியரை வைத்து, விடைக்குறிப்பை தயார் செய்துள்ளது. மேலும், விடைக்குறிப்பு தயார் செய்ய, பயிற்சி மையத்தை சேர்ந்த சிலர் உடந்தையாக செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முறைகேடுக்கு துணைபோன தேர்வர்கள், சில பயிற்சி மையங்களின் பரிந்துரைகளில், இடைத்தரகர்களை அணுகியதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், பயிற்சி மையங்களை கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவர, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்பு துறை, வருமான வரித்துறை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் என, பல தரப்பிலும் ரகசிய கண்காணிப்பு துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி.,யின் வினாத்தாள்கள், பயிற்சி மையங்களுக்கு கசிகிறதா என்பதை கண்காணிக்கவும், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.பயிற்சி மையங்களில், தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மட்டும் நடக்கிறதா; குறிப்பிட்ட மாணவர்களை தேர்வு செய்து, அவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற சட்டவிரோத உதவி செய்யப்படுகிறதா என, அரசின் பல்வேறு துறைகள் கண்காணிப்பதாக, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews