பொதுத்தேர்வு விடைத்தாள்களை மாணவர்களே திருத்தலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، فبراير 23، 2020

Comments:0

பொதுத்தேர்வு விடைத்தாள்களை மாணவர்களே திருத்தலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மேற்கு வங்காள மாநிலத்தில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களுடைய விடைத்தாள்களை தாங்களே திருத்திக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கு காணலாம். மேற்கு வங்காளத்தில் கல்வித்தரம், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் விதமாக, மாநில கல்வித்துறையில் கடந்தாண்டு புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களுடைய விடைத்தாள்களை, தாங்களே திருத்திக் கொள்ளலாம்.
12 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு 2019-20 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 12 முதல் மார்ச் 27 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், தற்போது விடைத்தாள்களை திருத்த விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பிப்ரவரி 28க்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
பொதுத்தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள்களை திருத்துவதற்கு ஜூலை 5 ஆம் தேதி, வித்யாசாகர் பவன் எனப்படும் தேர்வுத்துறை இயக்குநனரகத்துக்கு அழைக்கப்படுவர். செல்போன், பேனா எதுவும் மதிப்பீடு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது. விடைத்தாள்கள் மதிப்பீடு முடிந்ததும், ஒரு சில வாரங்களில் பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.மேற்கு வங்காளத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடைமுறைக்கு மாணவர்கள், பெற்றோர்கள் த்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة