பொதுத்தேர்வுக்கு தயாராவதில் மாணவர்களே கூல்! பயம், பதற்றம் விட்டால் வெற்றி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 29, 2020

Comments:0

பொதுத்தேர்வுக்கு தயாராவதில் மாணவர்களே கூல்! பயம், பதற்றம் விட்டால் வெற்றி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் 2ம் தேதி துவங்கவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில், 34 ஆயிரத்து 909 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பயம், பதற்றமின்றி பொதுத்தேர்வு எழுத, உளவியல் ஆலோசகர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.தமிழகம் முழுக்க, மாநில கல்வித்திட்டம் பின்பற்றும் மாணவர்களுக்கு, வரும் 2ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது; 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. கோவை மாவட்டத்தில், 356 பள்ளிகளை சேர்ந்த, 34 ஆயிரத்து 286 பேர் எழுதுகின்றனர். 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, 623 தனித்தேர்வர்களுக்கு, மூன்று மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இணை இயக்குனர் ராமசாமி தலைமையில், எந்த புகாருக்கும் இடமளிக்காத வகையில், தேர்வுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இறுதிக்கட்ட ஆய்வுப்பணிகள் நடக்கின்றன.உளவியல் ஆலோசகர் அருள்வடிவு கூறுகையில், ''பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், ஏற்கனவே இரு பொதுத்தேர்வுகளை சந்தித்துள்ளனர். எனவே,பயம், பதற்றம் அடையவேண்டாம். விடைத்தாள் சமர்ப்பிக்கும் முன்பு, கேள்வி எண், பகுதி எண் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏராளமான உயர்கல்வி வாய்ப்புகள் இருப்பதால், தன்னம்பிக்கையுடன் தேர்வறைக்குள் நுழைபவர்களுக்கு, வெற்றி நிச்சயம்,'' என்றார்.
தேர்விற்காக... சில டிப்ஸ்
1. குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு சென்று இறுதி நேர பதற்றத்தை தவிர்த்து கொள்ள வேண்டும்.
2. தேர்விற்கு முந்தைய நாளே தேர்விற்கான எழுது பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
3. கூடுதலாக ஒரு பேனா கையில் வைத்திருப்பது தேர்வறையில் உதவும்.
4. தேர்விற்கு முந்தைய இரவு அதிகம் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.
5. தேர்வு காலங்களில் அதிகம் பழங்கள் & காய்கறிகளை உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.
அதிகளவில் நீர் பருக வேண்டும்.
6. தேர்வறைக்கு செல்லும் முன் சிறு காகித துண்டு துணுக்குகள் உள்ளனவா சுய பரிசோதனை செய்து தன்னம்பிக்கையுடன் தேர்வறை செல்ல வேண்டும்.
7. முன் திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை மிக அவசியம்.
8. வினாத்தாள் படிக்கும் 10 நிமிடம் மிக முக்கிய தருணம். சலனமின்றி வினாத்தாளை படியுங்கள். வினாத்தாள் எவ்வளவு கடினத் தன்மை மிக்கதாய் இருப்பினும் பதற்றம் வேண்டாம். நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும்.
9. தேர்வு தாளில் கையொப்பமிட மறக்க வேண்டாம்.
10. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் பற்றி கலந்துரையாடலை தவிர்க்கவும். எழுதியவை மாறப்போவதில்லை.
11. சிறு உறக்கம் எடுத்து கொண்டு புத்துணர்வுடன் அடுத்த தேர்விற்கு படிக்கவும்.
12. விடுமுறை நாள் சோம்பலை தவிர்க்க குழுவாக படியுங்கள் அல்லது பள்ளி சென்று படியுங்கள்.
13. இறுதி நேரத்தில் படித்ததை மீள்பார்வை செய்யுங்கள்.
புதியவை படிக்க வேண்டாம்.
14. தேர்வை மயிலிறகை போல மென்மையாய் அணுகவும் . மகிழ்வாய் தேர்வினை எழுதுங்கள் .
15. உங்களுக்கு வழிகாட்டியான பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் ஆசி பெற்று செல்லுங்கள். கூடுதல் நம்பிக்கை பிறக்கும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews