இடைநிற்றல் விவகாரம் தமிழகம் விளக்கம் கேட்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، فبراير 18، 2020

Comments:0

இடைநிற்றல் விவகாரம் தமிழகம் விளக்கம் கேட்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சட்டசபையில் நடந்த விவாதம்:காங்., - விஜயதரணி: தமிழகத்தில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல், 8.2 சதவீதத்தில் இருந்து, 16.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என, லோக்சபாவில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கூறியுள்ளார். இடைநிற்றல் காரணமாக, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில், அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை, தெளிவுப்படுத்த வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: டில்லி, அசாம், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களிலும், மாணவர்கள் இடைநிற்றல் உள்ளது. எந்த அடிப்படையில், தமிழகத்தில், மாணவர்கள் இடைநிற்றல் குறித்து கணக்கிடப்பட்டது என, கடிதம் வாயிலாக, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம்; அங்கிருந்து, இன்னும் பதில் வரவில்லை. இடைநிற்றல் விவகாரத்தில், தமிழக அரசு வழங்கும் புள்ளி விபரங்கள் மட்டுமே சரியானவை.இவ்வாறு, விவாதம் நடந்தது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة