இன்ஜினியரிங் படிப்பு கட்டணம் உயர வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 14, 2020

Comments:0

இன்ஜினியரிங் படிப்பு கட்டணம் உயர வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் கல்லுாரி களில், 15 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற, புதிய விதியால், கல்வி கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளதாக, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், பொது தேர்வுக்கு பின் மருத்துவம், இன்ஜினியரிங், கட்டடக் கலை மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவர். இந்த படிப்புகளை நடத்துவதற்கு, கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான பணிகளை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை மேற்கொண்டுள்ளது.
திருத்தம்இதன் ஒரு கட்டமாக, இன்ஜினியரிங் மற்றும், 'பார்மசி' கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கல்வி தகுதி, பேராசிரியர்கள் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு, பட்டப் படிப்பின் வகைகள் போன்றவை குறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகள் வெளியாகியுள்ளன. கல்வி தகுதியில், இன்ஜினியரிங் படிப்புக்கு மட்டும், கணிதம் மற்றும் இயற்பியலுடன், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட, ஏதாவது ஒரு பாடப்பிரிவை சேர்த்து படித்திருக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. மேலும், இன்ஜி., கல்லுாரிகளின் பேராசிரியர் பதவிக்கு, சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டு வரை, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 20 மாணவர்களுக்கு, ஒரு பேராசிரியர் வீதம் இருக்க வேண்டும் என்ற, விதி அமலில் உள்ளது. புதிய விதிகளின்படி, வரும் கல்வி ஆண்டு முதல், 15 மாணவர்களுக்கு, ஒரு பேராசிரியர் என்ற விகிதத்தில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்த விதியால், ஒவ்வொரு கல்லுாரியும், கூடுதலாக பேராசியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு கோரிக்கைஅதனால், கல்லுாரி நிர்வாகத்துக்கு கூடுதல் செலவு ஏற்படும். அதை ஈடுகட்டும் வகையில், மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என, கல்லுாரிகள் தரப்பில், அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய விதிகளால், வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் கல்வி கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளதாக, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் வரும் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணங்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்காக மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் புதிதாக சேர்ந்த பேராசிரியர்களுக்கே மாதத்திற்கு ரூ 30 ஆயிரம் ஊதியமாக பெறப்படுகிறது.
கல்வி கட்டணம் குறித்து மாநில அரசுகளுக்கு தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது. அதில் 6ஆவது மற்றும் 7ஆவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்களை மாநில கட்டண ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழுவின் பரிந்துரையின்படி பொறியியல் கல்லூரிகள் எங்கிருந்தாலும் சரி அதில் ஆண்டு கட்டணமாக ரூ 1.44 லட்சம் முதல் 1.58 லட்சம் வரை அதிகபட்ச கட்டணமாகும்.
ஆனால் குறைந்தபட்ச கல்விக் கட்டணம் குறித்து அந்த ஆணையம் எதையும் பரிந்துரைக்கவில்லை. தமிழகத்தில் அரசின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ 55 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அது போல் தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு கல்விக் கட்டணம் ரூ 90 ஆயிரம் ஆகும். கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை ஏற்றாவிட்டால் பேராசிரியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவது சாத்தியமில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 50 சதவீதம் கல்விக் கட்டணத்தை உயர்த்தப்படும் என தெரிகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews