بحث هذه المدونة الإلكترونية
السبت، فبراير 08، 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சன் பவுண்டேஷன் அளித்த ரூ.1.92 கோடி ரூபாய் நிதி உதவியுடன் கட்டப்பட்ட 37 அங்கன்வாடி மையங்கள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காகவும் கல்வி நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தவும் பல்வேறு அமைப்புகளுக்கு சன் பவுண்டேஷன் நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம் ரெட்டியப்பட்டி, ஓ.கோவில்பட்டி, சந்திரகிரிபுரம், குத்தாலம்பட்டி, செங்குன்றபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சிதிலமடைந்திருந்த அங்கன்வாடி மையங்களுக்குப் பதிலாக புதிய மையங்கள் கட்டவும் சீரமைக்கவும் சன் பவுண்டேஷன் ரூ.1.92 கோடி நிதி உதவி அளித்திருந்தது. இந்த நிதி உதவியின் மூலம் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டன.
சன் பவுண்டேஷன் சார்பில் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட காவேரி கலாநிதி மாறன், பாவாலி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை குழந்தைகளைக் கொண்டே திறந்து வைத்தார். (இடது). இந்த அங்கன்வாடி மையங்களில் பாடங்களை எளிதாக விளக்கும் வகையில் படங்கள், விளையாட்டு உபகரணங்கள், ஸ்மார்ட் டி.வி., காய்கறித் தோட்டம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சன் பவுண்டேஷன் இதுவரை 71 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
சன் பவுண்டேஷன் நிதி உதவியால் கட்டப்பட்ட 37 அங்கன்வாடி மையங்கள் திறப்பு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.