'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் 10 பேரின் படங்கள் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، فبراير 12، 2020

Comments:0

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் 10 பேரின் படங்கள் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'நீட்' தேர்வில், தமிழக மாணவர்களுக்கு பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதியதாக தேடப்பட்டு வந்த, இரண்டு பெண்கள் உட்பட, 10 பேரின் புகைப்படத்தை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வெளியிட்டுள்ளனர்.
'நீட்' தேர்வு முறைகேடு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, வேறு சிலரை தேர்வு எழுத வைத்த முறைகேடு நடந்தது. இது தொடர்பாக, தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை, டாக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட, 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில், தமிழக மாணவர்களுக்கு பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து, 'நீட்' தேர்வு எழுதிய, இரண்டு பெண்கள் உட்பட, 10 பேரின் படத்தை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று வெளியிட்டனர். இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், 94438 84395 என்ற மொபைல் போன் எண்ணிற்கும், Dspccwcbcid@tn.gov.in என்ற, இ - மெயில் முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என, அறிவித்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة