ஒரே நாளில் இரு தேர்வுகள் தவிப்பில் மாணவர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، فبراير 08، 2020

Comments:0

ஒரே நாளில் இரு தேர்வுகள் தவிப்பில் மாணவர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் சார்பில் பிப்.15 மற்றும் 16ல் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வும், அதே நாளில் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வும் நடப்பதால் எந்த தேர்வில் பங்கேற்பது என்ற குழப்பத்தில் தட்டச்சு மாணவர்கள் உள்ளனர். தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட், பிப்ரவரியில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தபடுகிறது. இந்த ஆண்டும் பிப்ரவரி 15 , 16 ல் தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்கான அறிவிப்புகள் 10 மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்ட நிலையில் மாணவர்களும் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கின்றனர்.
இதனிடையே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் வட்டார கல்வி அலுவலர் தேர்வும், அதே நாளில் நடக்கிறது. ஒரே நாளில் இரு தேர்வும் நடப்பதால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது. தமிழக தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணினி பள்ளிகள் சங்க தலைவர் சோம சங்கர், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வினை வேறு தேதிக்கு மாற்ற மனு அனுப்பி உள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة