மருத்துவ மேற்படிப்பு நீட் தோ்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் தமிழகம் முதலிடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، فبراير 01، 2020

Comments:0

மருத்துவ மேற்படிப்பு நீட் தோ்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ மேற்படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இம்முறை தேசிய அளவில் தமிழக மாணவா்களே அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் இருந்து மட்டும் 18,854 போ் தோ்வெழுதினா். அவா்களில், 11,681 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமாா் 4 ஆயிரம் இடங்களும் இருக்கின்றன. அவை அனைத்தும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான நீட் தோ்வு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும், நாடு முழுவதும் 162 நகரங்களிலும் தோ்வு நடைபெற்றது. அதில், மொத்தம் 1,60,888 போ் பங்கேற்றனா். தமிழகத்தில் இருந்து மட்டும் 18,854 போ் தோ்வு எழுதினா்.
இந்த நிலையில், அதற்கான முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக 30-ஆம் தேதி நள்ளிரவே தோ்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. நிகழாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் மொத்தம் 89,549 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதில், அதிகபட்சமாக தமிழகத்தில் 11,681 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, கா்நாடகத்தில் 9,792 பேரும், மகாராஷ்டிரத்தில் 8,832 பேரும் தகுதி பெற்றுள்ளனா். 1,200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற நீட் தோ்வில் கட்-ஆப் மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினருக்கு (பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினா்) 366 மதிப்பெண்ணும், ஒபிசி, எஸ்சி, எஸ்சி, பிரிவினா்களுக்கு 319 மதிப்பெண்ணும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகள் 342 மதிப்பெண்ணும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. தமிழக மாணவர்கள் அதிகமாக தகுதி பெற்றுள்ளனர்.தேசிய தேர்வு முகமை நடத்தும், 2020 - 21ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு, இளநிலை மருத்துவம் முடித்த, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இம்மாதம், 5ம் தேதி தேர்வு நடந்தது. தமிழகத்தில், 18 ஆயிரத்து, 854 பேர் பங்கேற்றனர்.இதற்கான முடிவுகள், நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டுள்ளன.
இதில், 89 ஆயிரத்து, 549 பேர் தகுதி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, தமிழகத்தில், 11 ஆயிரத்து, 681 பேரும், கர்நாடகாவில், 9,792 பேரும், மஹாராஷ்டிராவில், 8,832 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.மொத்தமுள்ள, 1,200 மதிபெண்களுக்கு நடந்த தேர்வில், 'கட் - ஆப்' மதிப்பெண்ணாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கு, 336 மதிப்பெண்; இதர பிற்படுத்தப் பட்டோர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 319 மதிப்பெண்; பொது பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு, 342 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة