தொகுதி நிதியில் நுாலகம் செங்கோட்டையன் உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 10, 2020

Comments:0

தொகுதி நிதியில் நுாலகம் செங்கோட்டையன் உறுதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
''எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், நுாலக கட்டடம் கட்ட, விரைவில் அனுமதி வழங்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - கிரி: செங்கம் தொகுதி, பெரும்பாக்கம் கிராமத்தில், நான் படித்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, தி.மு.க., ஆட்சியில் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. இங்கு படிக்கும் மாணவர்கள், உயர்நிலை கல்வி கற்க, 6 கிலோ மீட்டர் துாரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, அந்த நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: நிபந்தனைகள் பூர்த்தியானால், நடப்பாண்டில் தரம் உயர்த்தப்படும்.அ.தி.மு.க., - தென்னரசு: தொகுதி மேம்பாட்டு நிதியில், நுாலக கட்டடம் கட்ட, நிதி ஒதுக்க முடியாத நிலை உள்ளது. அதற்கு, அனுமதி வழங்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: விரைவில், அனுமதி வழங்கப்படும்.
தி.மு.க., - வாகை சந்திரசேகர்: சென்னையில் உள்ள, ஐ.ஐ.டி., நிறுவனத்திற்கு, மூன்று சிறிய நுழைவு வாயில் உள்ளது. வேளச்சேரி காந்தி சாலையில், ஒரு நுழைவு வாயில் இருந்தது. அதை திடீரென மூடிவிட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் ஐ.ஐ.டி., வளாகத்திற்குள் உள்ளே அமைந்துள்ள, பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். உடனடியாக, ஐ.ஐ.டி., நிறுவனத்துடன் பேசி, அந்த வாயிலை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: உயர் கல்வித் துறை அமைச்சர் வழியே, ஐ.ஐ.டி., நிறுவனத்துடன் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews