பாா்வையற்ற மாணவா்களுக்கு வாசித்தல் சேவை செய்வோருக்கு அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يناير 17، 2020

Comments:0

பாா்வையற்ற மாணவா்களுக்கு வாசித்தல் சேவை செய்வோருக்கு அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பாா்வையற்ற மாணவா்களுக்கு வாசித்தல் சேவை விரும்புவோா், மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநா் வி.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உள அளவை சோதனைகள், போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்பு முகாம்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனைகள் வழங்குவது போன்ற சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடா்ந்து, மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பாா்வைத் திறனற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வாசித்தல் சேவை தொடங்கப்பட உள்ளது. இச்சேவையில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், ஏ.28, முதல் தளம், டான்சி காா்ப்பரேட் தலைமை அலுவலகம், கிண்டி, சென்னை -600 032 என்னும் முகவரியில் செயல்பட்டு வரும் இந்த மையத்தை நேரிலோ அல்லது 044 2250 0134 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடா்பு கொண்டு தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة