بحث هذه المدونة الإلكترونية
الأحد، يناير 19، 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்தில் செயல்படும் வழக்காடு மன்றத்திற்கு, வரும் வழக்குகளை பதிவு செய்து வாதாட, சட்ட ஆலோசகர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை பாதுகாக்கவும், மாற்றுத் திறனாளிகள் ஆணையரகத்தில் செயல்படும், வழக்காடு மன்றத்திற்கு வரும், வழக்குகளைப் பதிவு செய்து வாதாடவும், தொகுப்பூதிய அடிப்படையில், சட்ட ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளார். அதே போல், மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய திட்டங்களை, மாவட்ட அளவில் உருவாக்கி, உலக வங்கி மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து, நிதி ஒதுக்கீடு பெற்றுச் செயல்படுத்த, தொகுப்பூதிய அடிப்படையில், திட்ட ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளார்.
இப்பணிகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்ட ஆலோசகர் பணிக்கு, மாத ஊதியமாக, 50 ஆயிரம் ரூபாய் முதல், 75 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலையில், பி.எல்., அல்லது எல்.எல்.பி., படித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், சரளமாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒப்பந்த காலம் ஓராண்டு. மதிப்பாய்வின் அடிப்படையில், மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்படும்.
திட்ட ஆலோசகர் பணிக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலையில், பி.ஏ., சமூகப் பணி, சமூகவியல் அல்லது எம்.ஏ., மனோதத்துவம், பொருளாதாரம் படித்திருக்க வேண்டும். அரசு கார்ப்பரேட், சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்றவற்றில், குறைந்தபட்சம், 20 கோடி ரூபாய்க்கு, திட்ட நிதியை திரட்டும் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தகுதியானவர்கள், வரும், 28ம் தேதிக்குள், சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான நல ஆணையர் அலுவலகத்திற்கு, விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.