மடிக்கணினி வழங்க நிதி இல்லாததால், ஒரு வகுப்பில் 4 மாணவருக்கு ஒரு டேப் வழங்க முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 31, 2020

Comments:0

மடிக்கணினி வழங்க நிதி இல்லாததால், ஒரு வகுப்பில் 4 மாணவருக்கு ஒரு டேப் வழங்க முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு 52 இடங்களில் தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 20 கி.மீ. தொலைவில் சென்று தேர்வு எழுதி வந்த நிலையை மாற்றி தற்போது 10 கி.மீ. தொலைவில் பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நிதி இல்லாததால், ஒரு வகுப்பில் 4 மாணவருக்கு ஒரு டேப் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி - அமைச்சர் செங்கோட்டையன் இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு 52 இடங்களில் தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 20 கி.மீ. தொலைவில் சென்று தேர்வு எழுதி வந்த நிலையை மாற்றி தற்போது 10 கி.மீ. தொலைவில் பள்ளிகளிலேயே தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நிதி இல்லாததால், ஒரு வகுப்பில் 4 மாணவருக்கு ஒரு டேப் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் சேர நுழைவுத்தேர்வு எழுதும்போது அரசுப்பள்ளியில் பொதுத்தேர்வு நடத்தக்கூடாதா? என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 57 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளுக்கு கட்சிப் பாகுபாடின்றி நிதி வழங்கி உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் கூடுதலாக காவிலிபாளையம் குளம் உள்ளிட்ட குளங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக, வரப்பாளையம் மற்றும் சித்தோடு பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தாமதமாக செல்வதற்கு காரணம் அங்குள்ள மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் மழை பெய்து மரங்கள் முறிந்து விழுந்ததே ஆகும்.
குறித்த நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர 3 வயது குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 5,8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தக்கூடாதா?இந்த பொதுத் தேர்வு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கு நடத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews