குடியரசு தின விழா பள்ளிக்கு வராத ஹெச்.எம். ஆசிரியை சஸ்பெண்ட்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يناير 27، 2020

Comments:0

குடியரசு தின விழா பள்ளிக்கு வராத ஹெச்.எம். ஆசிரியை சஸ்பெண்ட்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குடியரசு தினவிழாவில் பள்ளிக்கு வராத தலைமையாசிரியர் உள்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதுார் ஒன்றியம், எஸ்.குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக ராஜா,ஆசிரியையாக பாக்கியசெல்வி பணியாற்றுகின்றனர். நேற்று காலை இருவரும் பள்ளியில் குடியரசு தினவிழாவிற்கு வரவில்லை. மாணவர்கள் வந்து காத்திருந்தனர்.நேற்று அந்த பள்ளியில் ரூ 14.50 லட்சத்தில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு பகல் 11:30 மணிக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ.,சின்னப்பன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் வந்தனர்.
அதுவரை பள்ளியில் தேசிய கொடியேற்றப்படாமல் இருப்பதை அறிந்த எம்.எல்.ஏ., சின்னப்பன், கல்வித்துறை அதிகாரிகளிடம் போன் செய்து ஆசிரியர்கள் வராதது குறித்து தெரிவித்தர். பின்னர் அவரே பள்ளியில் தேசிய கொடியேற்றி வைத்தார். புதிய கட்டட அடிக்கல் விழாவிலும் பங்கேற்று திரும்பினார்.பள்ளி குடியரசு தின விழாவில் பங்கேற்காத தலைமையாசிரியர் ராஜா, ஆசிரியர் பாக்கியசெல்வி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கோவில்பட்டி கல்வி அலுவலர் மாரியப்பன் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் யூனியனுக்கு உட்பட்ட என்.ஜெகவீரபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது எஸ்.குமராபுரம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் ராஜா என்பவர் தலைமையாசிரியராகவும் பாக்கியசெல்வி என்பவர் இடைநிலை ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். குடியரசு தினமான நேற்று விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், புதூர் பிடிஓக்கள் பிரபு, சிவபாலன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி உட்பட பலர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதியகட்டிடம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு காலை 11.30 மணிக்கு மேல் சென்றுள்ளனர்.
பள்ளியின் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி இல்லாமல் இருந்ததை பார்த்த எம்எல்ஏ சின்னப்பன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விசாரித்துள்ளார். இதில் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி குடியரசுதினவிழா கொண்டாடப்படவில்லை என்பதும், நேற்று பள்ளிக்கு ஆசிரியர்கள் இருவரும் வரவில்லை என்பதும் தெரியவந்தது. உடனடியாக பள்ளியின் கொடிக்கம்பத்தை சீரமைத்து எம்எல்ஏ சின்னப்பன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதுபற்றி மாவட்ட கல்வி அலுவலர் மாரியப்பன் விசாரித்து, தலைமை ஆசிரியர் ராஜா மற்றும் இடைநிலை ஆசிரியை பாக்கியசெல்வி இருவரையும் சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பித்துள்ளார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة