ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 31, 2020

Comments:0

ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருநெல்வேலி, குழந்தை இயேசு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தவர் பேச்சியம்மாள் 15. துாத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லுாரில் இருந்து தினமும் பள்ளி வந்தார். மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால், பள்ளியின் பத்தாம் வகுப்பு நுாறு சதவீத தேர்ச்சி பாதிக்கும் என ஆசிரியைகள், மாணவியை திட்டினர்.அண்மையில் பெற்றோர் சந்திப்பிற்கு வந்திருந்த மாணவியின் தாயார் ஆழ்வாரிடமும் இதையே கூறி பள்ளிச்சான்றிதழை பெற்றுச்செல்லுமாறு கண்டிப்புடன் கூறியுள்ளனர்.
குடியரசு தினத்தன்று பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடந்துள்ளது. அதற்கு வராததால் மறுநாள் வந்த பேச்சியம்மாளை கண்டித்துள்ளனர். நேற்றுமுன்தினம் மீண்டும் 2 ஆசிரியைகள் திட்டியுள்ளனர்.பெற்றோர் விவசாய பணிகளுக்கு சென்றிருந்ததால் வீட்டிற்கு வந்த பேச்சியம்மாள் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உறவினர்கள் பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியைகள் மீது வழக்குபதிவு செய்தால் மட்டுமே மாணவியின் உடலை பெறுவோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews