கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يناير 08، 2020

Comments:0

கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சாா்பில் கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "கல்வி என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி மற்றும் வளத்தின் அடிப்படையாகும். கல்வியின் என்பது, வெறும் உண்மைகளை அறிவதும், சூத்திரங்களைப் படிப்பதுமாக சுருங்கிவிடக் கூடாது. அதன் முக்கிய நோக்கமே ஆக்கப்பூர்மாக சிந்திக்கவும், சிந்தனையை விரிவடையச் செய்யவும் தூண்ட வேண்டும். அனைவருக்கு கல்வியை அளிப்பதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் மூலம், சிறந்த முறையில் செயல் வடிவில் கல்வியை கொண்டு சேர்ப்பதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2022-இல் புதிய இந்தியா என்ற கனவை நனவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதற்கு கல்வி மிக முக்கியமான ஒன்று. இந்த அரங்கில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்கள், நிச்சயம் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த எட்டாவது கல்விச் சிந்தனை அரங்கில் பங்குபெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة