بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، يناير 21، 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருத்தணி தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்ற வாசகத்தை, 2,020 மாணவர்கள் எழுதி, ஜனாதிபதிக்கு அனுப்பும், உலக சாதனை முயற்சி, நேற்று மேற்கொள்ளப்பட்டது.
திருத்தணி தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வரும், 24ல் கொண்டாடப்படும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, உலக சாதனை படைக்கும் முயற்சி, நேற்று நடந்தது.பள்ளி வளாகத்தில், 2,020 மாணவர்கள், 'வீ சப்போர்ட் சைல்ட் ரைட்ஸ்' என்ற ஆங்கில வார்த்தை வடிவில் அமர வைக்கப்பட்டனர்.
மாணவர்கள், தலா, ஓர் அஞ்சல் அட்டையில், 'குழந்தைகள் உரிமைகளை காப்போம்; பெண் குழந்தை திருமணத்தை தடுப்போம்; பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற வாசகங்களை எழுதினர்.முன்னதாக நிகழ்ச்சியை, பள்ளி தாளாளர் எஸ்.பாலாஜி துவக்கி வைத்தார். பின், மாணவர்கள் எழுதிய, 2,020 அஞ்சல் அட்டைகளை, ஜனாதிபதிக்கு அனுப்பி, 'ஜெட்லி புக் ஆப் ரிக்கார்டு' இடம் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்ற அனைத்து மாணவ - மாணவியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சி, பள்ளி நிர்வாகம், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' மற்றும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் சார்பில் நடந்தது.நிகழ்ச்சியில், தளபதி மகளிர் கல்லுாரி முதல்வர் பாலசுப்ரமணியம், திட்ட மேலாளர் வெங்கடேசன், இடைநிலை ஆசிரியர் கோகுல்ராஜ் உட்பட, பலர் பங்கேற்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
AWARENESS
STUDENTS
2,020 அஞ்சல் அட்டைகளில் வாசகம் எழுதி பள்ளி மாணவர்கள் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு!
2,020 அஞ்சல் அட்டைகளில் வாசகம் எழுதி பள்ளி மாணவர்கள் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.