நாளை 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يناير 18، 2020

Comments:0

நாளை 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னையில் வரும் 19ம் தேதி 1654 மையங்களில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மூலம் 7 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி போலியோவை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இதன்படி இந்த ஆண்டிற்கான சிறப்பு முகாம் வரும் 19ம் தேதி நாளை தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதுதொடர்பாக அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.
இந்த முறை சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1438 நிரந்தர மையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையம், வழிபாட்டுதலம், மார்க்கெட் பகுதிகளில் 165 மையங்கள், செங்கல் சூளைகள், கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் 45 மையங்கள் என்று மொத்தம் 1645 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். ஒவ்வொரு மையத்திலும் நான்கு பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் செயல்படும் மையங்கள் காலை முதல் இரவு வரை செயல்படும். இதை தவிர்த்து நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு முகாம் முடிந்தவுடன் அடுத்ததாக, வீடாக வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி இரண்டு பணியாளர்கள் ஒரு குழுவாக பிரிக்கப்பட்டு வீடு வீடாக ஆய்வு செய்வார்கள். சென்னையில் 300 முதல் 400 வீடுகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வின் போது சொட்டு மருந்து வழங்கப்பட்ட வீடுகளில் x குறியீடும், வழங்கப்படாத வீடுகளில் p குறியீடு போடப்படும். மொத்தம் 7 ஆயிரம் ஊழியர்கள் இந்த முகாமில் பணியாற்ற உள்ளனர். நாளை நடைபெறும் முகாமில்களில் 7 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னையில் வரும் 19ம் தேதி 1654 மையங்களில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மூலம் 7 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி போலியோவை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு போலியோ சொட்டு மருந்து வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இதன்படி இந்த ஆண்டிற்கான சிறப்பு முகாம் வரும் 19ம் தேதி நடக்கிறது.
இதுதொடர்பாக அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில் மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி, உலக சுகதார நிறுவனத்தைச் சேர்ந்த சுரேந்திரன், மாநகர சுகாதார அலுவலர் ஜெகதீசன், மருத்துவ சேவைகள் துறை கூடுதல் இயக்குனர் ஹேமலதா, கூடுதல் மாநகர மருத்துவ அலுவலர் பானுமதி மற்றும்ரயில்வே, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்விதுறை, மாநகர போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த முறை சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் 1438 நிரந்தர மையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையம், வழிபாட்டுதலம், மார்க்கெட் பகுதிகளில் 165 மையங்கள், செங்கல் சூளைகள், கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் 45 மையங்கள் என்று மொத்தம் 1645 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். ஒவ்வொரு மையத்திலும் நான்கு பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் செயல்படும் மையங்கள் காலை முதல் இரவு வரை செயல்படும். இதை தவிர்த்து நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு முகாம் முடிந்தவுடன் அடுத்ததாக, வீடாக வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி இரண்டு பணியாளர்கள் ஒரு குழுவாக பிரிக்கப்பட்டு வீடு வீடாக ஆய்வு செய்வார்கள். சென்னையில் 300 முதல் 400 வீடுகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது சொட்டு மருந்து வழங்கப்பட்ட வீடுகளில் X குறியீடும், வழங்கப்படாத வீடுகளில் p குறியீடு போடப்படும். மொத்தம் 7 ஆயிரம் ஊழியர்கள் இந்த முகாமில் பணியாற்ற உள்ளனர். இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பகுதியில் 7 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة