தாய்மொழி வழியாக உயர் கல்வி: மத்திய அரசு திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يناير 06، 2020

Comments:0

தாய்மொழி வழியாக உயர் கல்வி: மத்திய அரசு திட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உயர் கல்வி வகுப்புகளில், தாய்மொழி வழிக்கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில், மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது. மருத்துவம், பொறியியல் உட்பட, உயர் கல்வி வகுப்பு பாடங்கள், ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகின்றன. தாய் மொழி மூலம், துவக்க, உயர்நிலை வகுப்பு படித்த மாணவர்கள் பலர், உயர்கல்வி பாடங்களை, ஆங்கில வழியில் படிக்கும்போது, சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால், ஏராளமான மாணவர்கள், உயர் கல்வியை பாதியிலேயே கைவிடுவதும், மன உளைச்சலுக்கு ஆளாவதும் நடக்கிறது.கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கை, வரைவு அறிக்கை தொடர்பாக, மத்திய அரசு, பல்வேறு கருத்துகளைப் பெற்றது. இதில், மருத்துவம், பொறியியல் உட்பட, உயர் கல்வி வகுப்பு பாடங்களை, தாய்மொழி வழியாகப் பயில்வதற்கு சாத்தியம் இருந்தால், அந்த வழியாகப் பயில்வதற்கு, ஊக்கம் தரும் வகையிலான திட்டத்தை, மத்திய அரசு வகுக்க உள்ளது.தமிழ் உள்ளிட்ட, 22 இந்திய மொழிகளில், உயர் கல்வியைப் பயில்வதற்கு வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள், துவக்க மற்றும் உயர்நிலை வகுப்புகளை, ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றியமைத்து வருகின்றன. இதை தவிர்த்து, தாய்மொழி வழிக் கல்விக்கே ஊக்கமளிக்கும் வகையில், திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة