தனியார் பள்ளிகள் மீது முதன்மை கல்வி அலுவலர்கள் விரிவாக விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يناير 07، 2020

Comments:0

தனியார் பள்ளிகள் மீது முதன்மை கல்வி அலுவலர்கள் விரிவாக விசாரணை நடத்த தேர்வுத்துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேர்தல் மற்றும் அரையாண்டு விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விட்டதால், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப்பிறகு, ஜூன் மாதம் திறக்கப்பட்ட பள்ளிகளில் காலதாமதமாக வந்த புத்தகங்களால் பாடம் நடத்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.
காலாண்டுத்தேர்வுக்கு பிறகு மழை காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டது.நவ., - டிச., மாதங்களில் மட்டுமே பள்ளிகள் சீராக இயங்கின. தற்போது அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில், தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.பின்னர் விடுமுறை நீட்டிக்கப்பட்டு நாளை (6ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது.தொடர்ந்து, இம்மாதம் பொங்கல் விடுமுறை, ஐந்து நாட்கள் வருகின்றன.
இவ்வாறு, தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கும்பட்சத்தில், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான நாட்கள் மிக குறைவாக இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், ஜன., இறுதியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வுகள் வருகின்றன. இதற்கிடையில் பாடங்களை மீண்டும் மறுமுறை குறிப்புகள் வழங்குவது என்பது இயலாத காரியம். இதனை ஈடுகட்ட சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரியில் விடுமுறை நாட்கள் அதிகரித்த நிலையில், பள்ளிகளில், மூன்றாம் பருவ பாடத்தை நடத்தி முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில், இரண்டாம் பருவ தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக ஜன., 2ல் திறக்க வேண்டிய பள்ளிகள், உள்ளாட்சி தேர்தலால், நாளை திறக்கப்படுகிறது. அத்துடன், பொங்கல் விடுமுறை வார நாளில் வருவதால், தொடர்ந்து, 10 நாள் வரை விடுமுறை விட வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால், மூன்றாம் பருவ பாடப்புத்தகத்தை நடத்தி முடிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.இதுகுறித்து, தலைமையாசிரியர் சிலர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில், 5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.
அவர்களுக்கு, முதல் இரு பருவங்களுடன், மூன்றாம் பருவ பாடமும் சேர்த்து, தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். பிப்ரவரி முதல், பொதுத்தேர்வு செய்முறை தேர்வு, முன்னேற்பாடு உள்ளிட்ட பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவர். இதனால், பாடம் நடத்த, வேலை நேரம் குறையும். ஆண்டுதோறும், இதே சூழல் உருவானாலும், நடப்பாண்டு ஜனவரியில், விடுமுறை அதிகரித்ததால், நிலைமை சிக்கலாகியுள்ளது.
இதனால், பல பள்ளிகளில், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை நடத்தாமலேயே கல்வியாண்டு முடிந்து விடும். இதனால், மாணவ, மாணவியர், அடுத்த வகுப்புகளுக்கு செல்லும் போது பாதிக்கப்படுவர். மாற்றாக, முப்பருவ கல்வி முறையை ரத்து செய்து, டிசம்பருக்குள் முழு பாடத்தை நடத்தி முடிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة