டாஸ்மாக் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை குறித்து சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 04, 2020

Comments:0

டாஸ்மாக் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணை குறித்து சுற்றறிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் சில்லறை விற்பனை கடை பணியாளர்களாக பணிபுரிந்தவர்கள் சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கு பணிநியமன ஆணையை 6ம் தேதி காலை வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பணி நியமன ஆணை வழங்கும்போது, நியமனம் செய்யப்பட்டுள்ள நபர்களை ஏற்கனவே அவர்கள் பணிபுரிந்துவரும் கடைப்பணியிலிருந்து 6ம் தேதி முற்பகல் விடுவிப்பு செய்து ஆணை வழங்கப்பட வேண்டும். பணிநியமனம் செய்யப்பட்டுள்ள இளநிலை உதவியாளர், பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும் என்ற விவரம் விடுவிப்பு உத்தரவில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
பணியேற்பு கடிதத்துடன் உதவி மருத்துவர் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் பெறப்பட்ட உடற் தகுதி சான்றை ஆஜர்படுத்த வேண்டும். தெரிவு செய்யப்பட்டுள்ள இளநிலை உதவியாளர்கள் பணியேற்றவுடன் அலுவலகத்தில் இருக்கை ஒதுக்கீடு செய்து, கையாளப்படும் பொருள் விவரமாக தெரிவித்து அலுவலக ஆணை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேற்படி அலுவலக ஆணை நகலினை தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கான உத்தரவுகளை இரட்டை பிரதிகளில் சார்பு செய்து சார்பு நகலை உடனடியாக மின்னஞ்சல் வழியாக ஸ்கேன் செய்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அசல் பிரதி தனிநபர் மூலம் 7ம் தேதி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews