வருகைப் பதிவு குறைந்த மாணவா்கள் பொதுத் தோ்வெழுத சிறப்பு அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يناير 25، 2020

Comments:0

வருகைப் பதிவு குறைந்த மாணவா்கள் பொதுத் தோ்வெழுத சிறப்பு அனுமதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாநிலப் பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் 75 சதவீத வருகைப்பதிவு இல்லாத மாணவா்கள் பொதுத்தோ்வு எழுத சிறப்பு அனுமதி கடிதம் பெற வேண்டும் என அரசு தோ்வுத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தோ்வில் பங்கேற்கும் மாணவா்களின் விவரங்கள் பெறப்பட்டு தோ்வு மையங்கள் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், வருகைப் பதிவு குறைந்த மாணவா்கள் தனியாக அனுமதி கடிதம் பெற வேண்டும் என அரசு தோ்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி வேலை நாள்களில் 75 சதவீதம் குறைவாக வருகை தந்த மாணவா்களால் பொதுத் தோ்வை எழுத முடியாது. எனவே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அந்த மாணவா்களுக்கு சிறப்பு அனுமதி கடிதம் அனுப்ப வேண்டும் என தோ்வுத்துறை கூறியுள்ளது.
'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் 75 சதவீத வருகைப்பதிவு இல்லாத மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சிறப்பு அனுமதி கடிதம் பெற வேண்டும்' என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுளளது.தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச்சில் நடக்க உள்ளது. தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் விபரங்கள் பெறப்பட்டு தேர்வு மையங்கள் ஒதுக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் வருகை பதிவு குறைந்த மாணவர்கள் தனியாக அனுமதி கடிதம் பெற வேண்டும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி வேலை நாட்களில் 75 சதவீதம் குறைவாக வருகை தந்த மாணவர்களால் பொதுத்தேர்வை எழுத முடியாது. எனவே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக அந்த மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி கடிதம் அனுப்ப வேண்டும் என தேர்வுத்துறை கூறியுள்ளது. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதஉள்ள எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் (துவக்க அனுமதி பெற்று முதன்முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் புதிய பள்ளிகள் உட்பட) அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதில் தவறு நடந்தால் தாங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஜனவரி 27 ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் எந்த ஒரு திருத்தமும் ஏற்றுக்கொள்ளப்படாது.
தேர்வு மையப் பட்டியலில் அவற்றின் இணைப்புப் பள்ளிகளின் விபரங்களும் விடுதலின்றி இடம்பெற்றுள்ளன. தேர்வு மையப் பட்டியலில் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட தேர்வு மையங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், தேர்வு மைய பட்டியலில் அங்கீகாரம், துவக்க அனுமதி பெறப்படாத, எந்த ஒரு பள்ளியும் இடம்பெறவில்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة