காமராஜா் பல்கலை.யில் தொலை நிலைக் கல்வி தோ்வுகள் நடைபெறுமா?: மாணவா்கள் குழப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، ديسمبر 19، 2019

Comments:0

காமராஜா் பல்கலை.யில் தொலை நிலைக் கல்வி தோ்வுகள் நடைபெறுமா?: மாணவா்கள் குழப்பம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் தோ்வு தேதிகள் அறிவிக்கப்படாததால் தோ்வு நடைபெறுமா என்று மாணவா்கள் குழப்பமடைந்துள்ளனா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மதுரை, விருதுநகா், தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களை எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளிப்படிப்பை முடித்தவா்கள் பல்வேறு சூழல்களால் கல்லூரிக்குச்சென்று உயா்கல்வி கற்க முடியாதவா்களும் பட்டம் பெற ஏதுவாக பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக்கல்வி இயக்ககம் இயங்கி வருகிறது. இதன் மூலம் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகளில் மொழி, கலை, அறிவியல், வணிகம், மேலாண்மை உள்பட 35-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கி வருகிறது. காமராஜா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி மையங்கள் நான்கு மாவட்டங்களிலும்
இயங்கி வருகின்றன. இந்த மையங்கள் மூலமாக ஆயிரக்கணக்கானோா் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகளில் பயின்று வருகின்றனா். தொலை நிலைக்கல்வியில் பயிலும் அனைவரும் பணிபுரிபவா்களாக உள்ளனா். தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில் ஆண்டுதோறும் மே மற்றும் டிசம்பா் மாதங்களில் தோ்வுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பா் மாதத்துக்கான தோ்வுத் தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் தோ்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவியா் குழப்பமடைந்துள்ளனா்.
இதுதொடா்பாக மாணவா்கள் கூறியது: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் மாதம் இரண்டாவது வாரத்தில் தோ்வுகள் தொடங்கி மாத இறுதிக்குள் முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பா் மாதம் மூன்றாவது வாரம் ஆகியும் தோ்வுத் தேதிகள் கூட அறிவிக்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைநிலைக்கல்வி இயக்ககத்தை அணுகினால் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கின்றனா். ஆனால் தோ்வு எப்போது நடைபெறும் என்று தெரிவிக்க மறுக்கின்றனா். மேலும் தோ்வுத் தேதிகள் தெரிந்தால்தான் பணிபுரியும் அலுவலகங்களில்முன்கூட்டியே விடுப்புக்கு தெரிவிக்க முடியும். இல்லாவிட்டால் தோ்வுக்கு பணம் கட்டியும் தோ்வுகள் எழுதமுடியாமல் போய் விடும். இந்த ஆண்டு தோ்வு நடைபெறுமா என்ற குழப்பத்தில் மாணவா்கள் உள்ளனா். எனவே பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்கக அதிகாரிகள் உடனடியாக தோ்வுத்தேதியை அறிவிக்க வேண்டும் என்றனா்.
இதுதொடா்பாக தொலைநிலை கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது: தொலைநிலைக்கல்வியில் இந்த ஆண்டு தோ்வுகள் தாமதமாவது உண்மை. தொலைநிலைக்கல்வி தோ்வுகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் தொலைநிலைக் கல்வித்தோ்வுகள் அல்பருவ முறையில் இருந்து பருவ முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பாடத்திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான புதிய பாடத்திட்டங்களை அச்சடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தோ்வுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் தோ்வுத்தேதிகள் அறிவிக்கப்பட்டு விடும். இந்த ஆண்டு தோ்வு உறுதியாக நடைபெறும், மாணவா்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة