بحث هذه المدونة الإلكترونية
الاثنين، ديسمبر 16، 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'உள்ளாட்சி தேர்தலுக்கு பின், 'கேங்மேன்' பணிக்கான எழுத்துத் தேர்வு நடக்கும்,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நேற்று அவர் கூறியதாவது:மின்வாரிய கேங்மேன் பணிக்கான உடல் தகுதித் தேர்வு, ஓரிரு நாட்களில் முடிந்து விடும். உள்ளாட்சி தேர்தலுக்கு பின், எழுத்துத் தேர்வு நடந்து, ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் மூலம், தமிழகம்முழுவதும், 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை, ஏற்கனவே முதல்வர் துவக்கி வைத்துள்ளார். தேர்தலுக்கு பின், இத்திட்டத்தின் பயன்கள் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
கேங்மேன் தேர்வு நடக்கும்போது, அதை வீடியோ பதிவு செய்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்வாரியம் கேங்மேன் (பயிற்சி) பணி குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பலரும் விண்ணப்பித்தனர். தற்போது பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட பணிக்கான உடல்பயிற்சி தேர்வு நடந்து வருகிறது. இவ்வாறு நடக்கும் தேர்வை வீடியோ பதிவு செய்து, ‘ஹார்ட் டிஸ்க்’ல் சேமித்து மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இது 4டிபிக்குள் மிகாமல் இருக்க வேண்டும். முதன்மை பொறியாளர்கள், தங்களது பகுதியில் இருந்து வரும் வீடியோ பதிவுகளை ஒன்றிணைத்து வாரியத்தின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் எனக்கூறியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
'கேங்மேன்' பணிக்கு எழுத்து தேர்வு எப்போது?
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.