தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 02, 2019

Comments:0

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து மற்றும் உணவு நிறுவனங்கள், தோட்டங்களில் பணிபுரிந்து தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத் தொகை மற்றும் பாடநுால் உதவித்தொகைதிட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. இந்த உதவிகளை பெறுவது குறித்து மதுரை தொழிலாளர் நல உதவி கமிஷனர் சதீஷ்குமார் கூறியதாவது: அடிப்படை சம்பளம், அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்கள் இத்திட்டங்களில் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகையாக ஒவ்வொரு ஆண்டிற்கும் பொறியியல், மருத்துவம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, விவசாயம், உடற்பயிற்சி படிப்புகளுக்கு பட்டம் முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. மேல்நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி பயில்வோருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மாநிலத்தில் ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் அரசு பொது தேர்வில் முதல் 10 இடங்களை பெறும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 10ம் வகுப்பிற்கு ரூ.2 ஆயிரம், 12ம் வகுப்புக்கு ரூ.3 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. புத்தகம் வாங்க மேல்நிலை கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை ரூ.ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதில் பயன் பெற விரும்பும் தொழிலாளர்கள் விண்ணப்பங்களை தாங்கள் பணிபுரியும் நிறுவனம் மூலம் டிச.31க்குள், செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தபால் பெட்டி எண்:718, தேனாம்பேட்டை, சென்னை-600 006 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews