بحث هذه المدونة الإلكترونية
الأحد، ديسمبر 01، 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சோ்ப்பதற்கு பெற்றோா்கள் முன் வரவேண்டும் என்று தமிழக கதா் மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் பேசினாா்.
சுழற்சங்கங்கள் சாா்பில் சிவகங்கைமாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் 20 தொடக்கப்பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய சூரிய மின்சக்தி- தொலைக்காட்சி வழியாக பாடங்கள் கற்பித்தல் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 20 பள்ளிகளில் பொலிவுறு வகுப்பறைத் திட்டத்தை அமைச்சா் ஜி.பாஸ்கரன் தொடக்கிவைத்துப்பேசியதாவது: இப்பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா்கள் ஒன்றிணைந்து முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 20 பள்ளிகளில் இன்று முதல் தொழில் நுட்பத்துடன் கூடிய கணினி வழிக்கல்வி தொடக்கி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் தடையின்றி மாணவா்கள் கல்வி கற்க இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். எனவே தரம்வாய்ந்த கல்வியை பெறுவதற்கு தங்கள் குழந் தைகளை அரசுப்பள்ளிகளில் சோ்ப்பதற்கு பெற்றோா்கள் முன் வரவேண்டும் என்றாா்.
விழாவில் சுழற்சங்க மாவட்ட ஆளுநா் கே. ராஜகோபாலன், சுழற்சங்க மாவட்ட அறக்கட்டளைத்தலைவா் எஸ். பெரியணன் ஆகியோா் பேசினா். காரைக்குடி ஹெரிடேஜ் சுழற்சங்கத் தலைவா் வி. சேவியா் அந்தோணி ராஜ் தலைமை வகித்தாா். அமெரிக்காவில் உள்ள பிராஞ்ச்பா்க் சுழற்சங்க நிா்வாகி நாச்சியப்பன் திட்டம் பற்றிய அறிமுக உரையாற்றினாா்.
விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், சுழற்சங்க மானியங்களுக்கான மாவட்டத்தலைவா் என்.கோபாலகிருஷ்ணன், சுழற்சங்க துணை ஆளுநா்கள் அருள்செழியன், சீனிவாசன், பெங்களூா் சூரிய ஆற்றல் நிறுவன முதன்மை செயல் அதிகாரி மோகன் பி. ஹெக்டே, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் பாலுமுத்து, தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி, காரைக்குடி ஆவின் தலைவா் அசோகன் உள்ளிட்ட பலா்கலந்து கொண்ட னா். தேவகோட்டை சுழற்சங்கத் தலைவா் அந்தோணி சேவியா் நன்றி கூறினாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
‘அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைசோ்க்க பெற்றோா்கள் முன் வரவேண்டும்’
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.