DSE - பிரதமருடன் தேர்வு பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்துதல் - PROC - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 19, 2019

Comments:0

DSE - பிரதமருடன் தேர்வு பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்துதல் - PROC

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்க, பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை, மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள், பொதுத் தேர்வை பயமின்றியும், நம்பிக்கையுடனும் எழுதும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்வேறு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு ஆண்டும், பொது தேர்வு மாணவர்களை நேரில் சந்தித்தும், வானொலி வழியாகவும் பேசி வருகிறார். நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களிடம், பிப்ரவரியில், பிரதமர் உரை வழங்க உள்ளார். அதற்கான கட்டுரை போட்டியை, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துஉள்ளது.
ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், இதில் பங்கேற்கலாம்.'தேர்வுகளை ஆய்வு செய்வோம்; நன்றி செலுத்துவது மிகப்பெரிய குணம்; உங்கள் எதிர்காலம் உங்கள் விருப்பத்தை பொறுத்தது; நமது கடமைகள்' ஆகிய தலைப்புகளில், கட்டுரைகள் எழுத வேண்டும். மாணவ - மாணவியர், தங்கள் கட்டுரைகளை, www.mygov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவற்றில் தேர்வாகும் கட்டுரைகளை எழுதிய மாணவ - மாணவியர், பிரதமரின் பொது தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துஉள்ளது. CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews