ஆசிரியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வழங்காமல் இழுத்தடிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، ديسمبر 10، 2019

Comments:0

ஆசிரியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வழங்காமல் இழுத்தடிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, வழங்கப்படும் சிறப்பு வருங்கால வைப்பு நிதியை அரசு வழங்காமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களது சம்பள பணத்தில் சிறப்பு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. கடந்த 1.10.2000க்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.20 பிடித்தம் செய்யப்படுகிறது. 1.10.2000க்கு பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ரூ.70 பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆசிரியர் ஓய்வு பெறும்போது அவர்கள் செலுத்திய பணம், வட்டி, அரசின் பங்களிப்பு ஆகியவை சேர்த்து வழங்கப்படும். இவ்வாறு ஒரு ஆசிரியருக்கு ஓய்வு பெறும் காலத்தில் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும். அரசுப்பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறும் சில நாட்களில் இப்பணம் கிடைத்து விடுகிறது. அரசுப்பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட கருவூலத்தில் உடனடியாக பில் பாஸ் செய்யப்பட்டு பணம் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, வருங்கால வைப்பு நிதிப்பணம் ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதற்கான பில் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டால், நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பில்லை பாஸ் செய்கிறோம் எனக் கூறுவதாக ஆசிரியர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இதற்கான ஒதுக்கீடு கோரி பள்ளிக்கல்வித்துறை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலருக்கு பைல் அனுப்பப்பட்டு அங்கிருந்து அனுமதியும், நிதி ஒதுக்கீடும் கிடைத்த பிறகே சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு பணப்பலன் கிடைக்கிறது. இதனால் அவர்கள் கல்வித்துறைக்கும், பள்ளிக்கும் அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. இவ்வாறு தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது, ‘‘சிறப்பு வருங்கால வைப்பு நிதியை ஆசிரியர் ஓய்வு பெற்ற அடுத்த நாளே வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. இந்த அரசாணை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இரண்டுக்குமே பொருந்தும். ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து, அலைக்கழித்து அதன் பிறகே பணப்பலன் கிடைக்க நடவடிக்கை எடுப்பதே, கல்வித்துறை அலுவலகத்துக்கு வழக்கமாகிவிட்டது. ஆண்டுக்கணக்கில் அலைய விடுகின்றனர். அரசாணையை பின்பற்றி உடனடியாக சிறப்பு வருங்கால வைப்பு நிதி மற்றும் பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة