உள்ளாட்சி தேர்தல் பணி 29,000 அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு வழங்கவில்லை: திட்டமிட்டு தவிர்ப்பதாக குற்றச்சாட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 25, 2019

Comments:0

உள்ளாட்சி தேர்தல் பணி 29,000 அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு வழங்கவில்லை: திட்டமிட்டு தவிர்ப்பதாக குற்றச்சாட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருவண்ணாமலை மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் 29 ஆயிரம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 18 ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக பகுதிகளில் மட்டும் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் நாளை மறுதினம் (27ம் தேதி), இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெறும். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியில், 29,367 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். அதையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, கடந்த 15ம் தேதி முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பும், 22ம் தேதி இரண்டாவது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பும் நடந்து முடிந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும், திருவண்ணாமலை, அனக்காவூர், செய்யாறு, கீழ்பென்னாத்தூர், பெரணமல்லூர், தண்டராம்பட்டு, தெள்ளாறு, துரிஞ்சாபுரம், வெம்பாக்கம் ஆகிய 9 ஒன்றியங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, நாளை காலை 10 மணிக்கு எந்த வாக்குச்சாவடியில் பணிபுரிய வேண்டும் என்ற ஆணை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, 2வது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் நாளில், தபால் வாக்குப்படிவம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், அவர்கள் ஒருவருக்குகூட தபால் வாக்குப்படிவம் வழங்கவில்லை. வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி முடியாததால், தபால் வாக்குகளை அளிக்க முடியவில்லை என்றும், அடுத்த சில நாட்களில் வழங்கப்படும் என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்தனர். ஆனால், இதுவரை தபால் வாக்குகள் யாருக்கும் வழங்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, வாக்குப்பதிவுக்கு முன்பே தபால் வாக்குகளை, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அளிக்க வேண்டும். அதற்கான அவகாசமும் நாளையுடன் முடிகிறது. மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் நாளை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு செல்ல உள்ளனர். எனவே, நாளை காலை தபால் வாக்குச்சீட்டுகளை அளித்தாலும், அவற்றை முறையாக பூர்த்தி செய்து அனுப்புவது என்பது இயலாததாகும்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 29 ஆயிரம் பேரின் தபால் வாக்குகள் வீணாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகள், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அமையும் வாய்ப்பு உள்ளது. எனவே, வெற்றி தோல்வியை தபால் வாக்குகள் சில இடங்களில் முடிவு செய்யும் நிலை ஏற்படும். அதனால், இந்த தேர்தலில் தபால் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், திட்டமிட்டு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகளை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews