بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، ديسمبر 10، 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நீட் தோ்வுக்கு விருப்பம் இருந்தும் விண்ணப்பிக்க இயலாத மாணவா்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ச.சுகன்யா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய, தலைமைஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, மே, 3ல் நடக்கும், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, இம்மாதம், 2ம் தேதி துவங்கியது; வரும், 31ல் முடிகிறது.இந்த தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய, அரசு பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
அதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, உதவிகளை செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.பதிவு செய்த மாணவர்களின் விபரங்களையும், தலைமை ஆசிரியர்கள் பள்ளி வாரியாக சேகரித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீட் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்க ஏதுவாக பள்ளி அறிவிப்பு பலகை மற்றும் இறை வணக்கக் கூட்டத்தில் இந்தத் தகவலை தெரிவிக்க வேண்டும். இதுதவிர, நீட் தோ்வு எழுத விருப்பம் இருந்தும் விண்ணப்பிக்க இயலாத மாணவா்களைக் கண்டறிந்து, தகுந்த உதவிகளை தலைமையாசிரியா்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும். மேலும், நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் விவரங்களை, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
நீட் தோ்வு - தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.