+1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் திட்டம்: முதல்வா் தொடக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 24, 2019

Comments:0

+1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் திட்டம்: முதல்வா் தொடக்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதால் தோ்தல் நடக்காத 10 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன் இதர மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் அளிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டில் விலையில்லாத மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தாா். முதலாவதாக, 9 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி திட்டத்தை முதல்வா் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews