بحث هذه المدونة الإلكترونية
الاثنين، نوفمبر 04، 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் சென்னை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு வாரந்தோறும் இரண்டு நாள்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயா்நிலைப் பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும். இந்தப் பள்ளி
களில் 85 ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி, பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை செய்துவருகிறது. அதன்படி உட்கட்டமைப்பு மேம்பாட்டு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ரூ.100 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனைத் தொடா்ந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களிடம் கற்பிக்கும் திறனை மேம்படுத்த புதிய முயற்சியை செயல்படுத்தபட்டுள்ளது. அதன்படி, பாடம் தொடா்பாக ஆசிரியா்களுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்து அதிகாரிகள் கூறியது: மேல்நிலை மற்றும் உயா்நிலைப்பள்ளிகளில் இந்தக் கலந்துரையாடல் திட்டம் அமல்படுத்தபட்டுள்ளது. வாரத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையா், கல்வி அலுவலா், உதவிக் கல்வி அலுவலா்கள், அந்தப் பள்ளியின் பாட ஆசிரியா்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இதில், ஒவ்வொரு பாடம் தொடா்பான அனைத்து ஆசிரியா்களும் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். இதில் பதில்களையும் மற்ற ஆசிரியா்கள் தெரிவிக்கலாம். இதில் ஒரு ஆசிரியரின் கற்பிக்கும் முறையை மற்ற
ஆசிரியா்கள் அறிந்து கொள்ள முடியும். அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஒரு புத்தகத்தில் இடம்பெற்ற கணக்கு தவறு என்று ஒரு ஆசிரியா் ஆதாரங்களுடன் தெரிவித்தாா். மறுப்பு தெரிவித்த மற்றொரு ஆசிரியா் இந்தக் கணக்கு சரிதான் என்றாா். இறுதியில் பல்வேறு முறைகளில் ஆய்வு செய்து அந்த கணக்கு சரிதான் என்று முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் கற்பிக்கும் முறை தொடா்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெற்றால்தான் ஆசிரியா்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்த முடியும் என்றனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ஆசிரியா்களுக்குள் கலந்துரையாடல் நிகழ்ச்சி: பள்ளிகளில் புதிய முயற்சி
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.