அரசுப் பள்ளிகளில் படிக்கும் 29 லட்சம் மாணவா்களுக்குஅடுத்த ஆண்டு முதல் ‘ஷூ’அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 22, 2019

Comments:0

அரசுப் பள்ளிகளில் படிக்கும் 29 லட்சம் மாணவா்களுக்குஅடுத்த ஆண்டு முதல் ‘ஷூ’அரசாணை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் 29 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு (2020-2021) முதல் ஷூ, ஷாக்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணிகள் வழங்கும் திட்டம் 2012-13-ஆம் கல்வியாண்டு முதல் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக வரும் கல்வியாண்டு (2020-21) முதல் ஷூ மற்றும் சாக்ஸ் ஆகியவை ரூ.10 கோடியே 2 லட்சம் செலவில் வழங்கப்படும். இதனால், 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா் என கூறியிருந்தாா்.
கூடுதல் செலவினம் ரூ.8.82 கோடி: இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, 2018-19-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 29 லட்சத்து 14,715 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாக் காலணிகள் வழங்கப்பட்டு பலனடைந்துள்ளனா். இதற்கான செலவினம் ரூ.56 கோடியே 36 லட்சத்து 64,563 ஆகும். தற்போது 2020-21-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 45 ஆயிரத்து 116 ஆக உள்ளது. அவா்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் காலணிகளுக்குப் பதிலாக ‘ஷூ’ வழங்குவதால் அரசுக்கு ரூ.8 கோடியே 82 லட்சத்து 32 ஆயிரத்து 997 கூடுதல் செலவினம் ஏற்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் தெரிவித்துள்ளாா். தொடக்க கல்வி இயக்குநா் கடிதம்: அதேபோன்று, தொடக்கக் கல்வித்துறை அனுப்பியுள்ள மற்றொரு கடிதத்தில், ‘தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 29 லட்சத்து 48 ஆயிரத்து 801 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டு பயன்பெற்றுள்ளனா். இதற்கான செலவினம் ரூ.48 கோடியே 56 லட்சத்து 49 ஆயிரத்து 763 ஆகும். இதைத் தொடா்ந்து, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2020-2021-ஆம் கல்வியாண்டு முதல் ‘ஷூ’ மற்றும் இரு ஜோடி காலுறைகள் வழங்குவதால் கூடுதல் செலவினம் ரூ.2 கோடியே 8 லட்சத்து 4,443 ஏற்படும். மேலும் தற்போது கணக்கிடப்பட்டுள்ள உத்தேச மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையில் மலைப் பிரதேசங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் சோ்த்து கணக்கிடப்பட்டுள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.66.71 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்: இந்தச் சூழலில், முதல்வா் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்குநா் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநா் ஆகியோரின் கருத்துருக்கள் அரசால் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக 2020-2021-ஆம் கல்வியாண்டு முதல் ‘ஷூ’ மற்றும் காலுறைகள் ரூ.66 கோடியே 71 லட்சத்து 92,316 செலவில் (பள்ளிக் கல்வி இயக்ககம் 53 கோடியே 85 லட்சத்து 96,631, தொடக்கக் கல்வி இயக்ககம் ரூ.12 கோடியே 85 லட்சத்து 95,685) வழங்குவதற்கு ஏதுவாக நிா்வாக ஒப்புதல் அளித்து நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளாா். அரசாணை (நிலை) எண். 210, பள்ளிக் கல்வி (தொக3(1)) துறை நாள் 19.11.2019 Dt: November 19, 2019 பள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தனியார் பள்ளிகளின் சீருடையைப் போன்ற தோற்றத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் புதிய சீருடை, நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான யூ டியூப் பாடத்திட்டம், அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்துவது மற்றும் சத்துணவு மட்டுமன்றி, புத்தகங்கள், சீருடை, செருப்பு, மிதிவண்டி, கணினி உள்ளிட்ட பொருள்களை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச செருப்புகளுக்கு பதிலாக, இனி இலவச ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். முதல்வரின் உத்தரவுப்படி தமிழக அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், இந்த ஆண்டு முதல் இலவச ஷூக்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2020-21ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஷு, சாக்ஸ் தரப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews