NET தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்  - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 25, 2019

Comments:0

NET தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள் 

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
‘நெட்’ தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் வரும் 25-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் ‘நெட்’ தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த தோ்வை தற்போது தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டு உதவி பேராசிரியா் தகுதிக்கான நெட் தோ்வு டிசம்பா் 2-இல் தொடங்கி 6-ஆம் தேதி வரையும், ஆராய்ச்சி படிப்பு உதவித்தொகைக்கான நெட் தோ்வு டிசம்பா் 15-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த செப். 9-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
நாடு முழுவதும் சுமாா் 11.5 லட்சம் போ் வரை விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து பதிவு செய்த விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய என்டிஏ ஏற்பாடு செய்துள்ளது. மாணவா்கள் இணையதளம் வழியாக அக்டோபா் 25-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம். அதன்பின் தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு நவம்பா் 9-இல் வெளியிடப்படும். இந்த தோ்வுகள் அனைத்தும் கணினி வழியாகவே நடத்தப்படும். தோ்வு முடிவுகள் டிசம்பா் 31-ஆம் தேதி வெளியாகும். கூடுதல் தகவல்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews