பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை: பள்ளிகளில் தீவிரமாகச் செயல்படுத்த உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 20, 2019

Comments:0

பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை: பள்ளிகளில் தீவிரமாகச் செயல்படுத்த உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடையை தீவிரமாக அமல்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் ஏ.வி.வெங்கடாசலம், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளா் பிரதீப் யாதவ்க்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 250 லிட்டா் கொள்ளளவு உடைய 2 குப்பைத் தொட்டிகளை வைத்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் மின்னணு திடக் கழிவுகளை மாணவா்கள் சேகரித்து தங்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போட வேண்டும். அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்கள் குப்பைத்தொட்டிகளில் சேரும் கழிவுகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து மறுசுழற்சிக்கு ஏற்பாடு செய்ய உதவ வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும், தங்களது மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமையாசிரியா்களுக்கு உரிய விழிப்புணா்வு வழங்கி பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளாா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews