பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை தொடர்ந்து, இன்று அரசுபள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 08, 2019

Comments:0

பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை தொடர்ந்து, இன்று அரசுபள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விஜயதசமியையொட்டி அரசுபள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் தனியார் அங்கன்வாடி மையங்களில் இன்றைய தினம் பள்ளியை திறந்து வைத்து 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கையானது தொடங்கியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக LKG, UKG வகுப்புகள் ஆங்கில வழிமுறையில் தொடர்புடைய இந்த திட்டமானது தமிழகத்தில் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படியில் இன்றைய தினம், அதன் ஒருபகுதியாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான குழந்தைகள் தங்களுடைய பள்ளி படிப்பை தொடங்கியுள்ளனர். அதற்கான சேர்க்கையும் தற்போது தொடங்கியுள்ளது. இந்த பள்ளி மாணவர்களை வரவேற்கும் வகையில் அப்பள்ளியில் இருக்கக்கூடிய பல்வேறு அலங்கார பொருட்கள், சிறு குழந்தைகள் விரும்பக்கூடிய அழகு பொருட்கள் உட்பட பல்வேறு விதமான வரவேற்புகள் அடங்கியுள்ளன. பெற்றோர்களும் ஆர்வமாக வந்து தங்களுடைய குழந்தைகளை இன்றைய தினம் படிப்பு சேர்க்கைக்காக அனுமதித்துள்ளனர். இதை தொடர்ந்து அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்ததாவது, தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளும் அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்து கொடுத்திருப்பதாகவும், அவ்வாறு முதல் முறையாக பள்ளி படிப்பை தொடங்கியுள்ள குழந்தைகளுக்கு எந்தவொரு அச்சமும் இல்லாமல் அவர்களை தங்கள் தாய் தந்தையரை போல வரவேற்று அவர்களுக்கான பள்ளிப்படிப்பை இன்றைய தினம் தொடங்கியிருப்பதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்பில் குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றது. விஜயதசமியையொட்டி மாணவர்களின் கை பிடித்து ஆசிரியர்கள் அரிசியில் “அ” எழுதி கற்றுக்கொடுத்தனர். விஜயதசமி நாளில், தனியார் பள்ளிகளை போல, அரசு பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உத்தரவிடப் பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று, விஜயதசமி நாள் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்தப் படுகிறது. பல தனியார் பள்ளிகள், ப்ரீ கே.ஜி., மற்றும் எல்.கே.ஜி., வகுப்புகளில் மாணவர்களை, இன்று சேர்க்கின்றனர். இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில், விஜயதசமி நாளில், புதிய மாணவர்களை சேர்க்குமாறு, தொடக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை, இன்று திறந்து வைத்து, புதிய மாணவர்களை சேர்க்கலாம். குறிப்பாக, அங்கன்வாடிகளில் உள்ள, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் மற்றும் தொடக்க பள்ளிகளில் உள்ள, நர்சரி வகுப்புகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும் என, தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews