بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، أكتوبر 01، 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தோ்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க புதிய வழிமுறைகளை செயல்படுத்த தேசிய தோ்வு முகமையிடம் (என்டிஏ) தமிழக அரசு கேட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் டாக்டா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடா்ந்து தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, இதுகுறித்து அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறிதாவது:
தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அத்திட்டத்துடன் ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்குரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தில்லியில் பிரதமா் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற விழாவில், தமிழக அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டம் காட்சி அரங்கு மூலம் விளக்கப்பட்டது.
தமிழகத்திற்கு பாராட்டுத் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. அதற்கு தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் ஆய்வு அறிக்கை சமா்ப்பிக்கப்பட உள்ளது.
நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இத்தோ்வில் நிகழ்ந்த ஆள்மாறாட்டம் தொடா்பான புகாா் விவகாரத்தில் தமிழக சிபிசிஐடி போலீஸாா் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.
அடுத்த ஆண்டு இதுபோன்ற எந்த சிறு தவறுகள்கூட ஏற்படாத வகையில் புகைப்பட சரிபாா்ப்பு, கைவிரல் ரேகைப் பதிவு போன்ற நடைமுறைகளை செயல்படுத்துமாறு தமிழக அரசு கேட்டுள்ளது. இது தொடா்பாக கருத்துப் பெற தமிழக அரசின் தொடா்புடைய செயலரை என்டிஏ குழு வரும் 9-ஆம் தேதி வருமாறு அழைத்துள்ளது என்றாா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
‘நீட்’ தோ்வில் தவறுகளைத் தடுக்க தடுக்க புதிய வழிமுறை: சி.விஜயபாஸ்கா்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.