பெண்கள் பள்ளியில் அதிக ஆசிரியைகள்: ராஜஸ்தான் திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 20, 2019

Comments:0

பெண்கள் பள்ளியில் அதிக ஆசிரியைகள்: ராஜஸ்தான் திட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெண்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, ராஜஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று பேசிய கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங், ''பெண்கள் பள்ளிகளில் அதிக அளவிலான ஆசிரியைகளை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அங்கு படிக்கும் மாணவிகள், தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தாயிடமோ, சகோதரிடயிடமோ சொல்வதுபோல ஆசிரியரிடமும் பகிர்ந்துகொள்ள முடியும். அதேபோல பெண்கள் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்குட்பட்ட ஆண் ஆசிரியர்கள் அனைவரையும் திரும்ப அழைத்துக்கொள்ளவும் அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் அர்த்தம் பெண்கள் பள்ளிகளில், ஆண்கள் கற்பிக்கக்கூடாது என்பதோ, 50 வயதுக்கு உட்பட்ட ஆண் ஆசிரியர்கள் வேலை செய்யக்கூடாது என்பதோ அல்ல. நமது மகள்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை நோக்கியே அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. மாணவிகளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது, பெண் ஆசிரியர்களுடன்தான் எளிதாக அதைப் பகிர முடியும். ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகளின்படியே, பெண் ஆசிரியர்களை நியமிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்தபிறகு அதிக அளவிலான ஆசிரியைகள் பெண்கள் பள்ளிகளில் நியமிக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்
ராஜஸ்தானில் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில், வேலைபார்க்கும், 50 வயதுக்கு கீழ் உள்ள ஆசிரியர்களை திரும்ப பெற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018 - 19ம் கல்வியாண்டில், மாநில அரசின் கணக்குப்படி பெண்கள் மட்டுமே படிக்கும் 1,019 பள்ளிகளும், இருபாலர் மட்டுமே படிக்கும் 68,910 பள்ளியும் உள்ளன. இந்த பள்ளிகளில் 3.82 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் விகிதம் 2:1 என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 69,929 பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆண் ஆசிரியர்களால், மாணவிகளுக்கு பாலியல் தொந்தவு கொடுக்கும் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.
இதனையடுத்து, பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில், பணிபுரியும் 50 வயதுக்கு கீழ் உள்ள ஆசிரியர்களை திரும்ப பெற்று கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது.இது பற்றி மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் கூறுகையில், பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் மட்டும் நியமிக்கப்படுவார்கள். 50 வயதுக்கு மேல் உள்ள ஆண் ஆசிரியர்கள் தேவை அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். பெண்கள் பள்ளியில் படிக்கும் ஆண் ஆசிரியர்கள் குறித்து விவரம் கேட்டுள்ளேன். போதிய ஆசிரியர்கள் இருக்கும்பட்சத்தில் அரசின் முடிவு அமல்படுத்தப்படும் என்றார். இது தொடர்பாக யுனிசெப் அமைப்பில் பணிபரிந்த கேபி கோத்தாரி கூறுகையில், ''மாநிலத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து அரசு ஆராயவில்லை. அதற்கு தீர்வு குறித்து யோசிக்கவில்லை. 1,019 பள்ளிகளில், 50 வயதுக்கு கீழ் உள்ள ஆசிரியர்களை திரும்ப பெற்று கொள்வது சாதாரண விஷயம். ஆனால், எஞ்சிய பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவோம்'' என்றார் ராஜஸ்தான் பல்கலையில் சோசியாலாஜி துறை தலைவர் ராஷ்மி ஜெயின் கூறுகையில், '' பெண்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடப்பதாக அமைச்சர் கூறுகிறாரா? பெண்கள் மட்டுமே பணிபுரியும் பள்ளிகள் உருவாக்கும் செயல் போன்று உள்ளது'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews