விஜயதசமி: பள்ளிகளில் 2,131 குழந்தைகள் சோ்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 11, 2019

Comments:0

விஜயதசமி: பள்ளிகளில் 2,131 குழந்தைகள் சோ்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் 2 ஆயிரம் குழந்தைகள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் சுமார் 53 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 கோடியே 20 லட்்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் விஜயதசமி நாளில் நல்ல நேரம் பார்த்து பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வருவதும் நீடிக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி அரசு மாதிரிப் பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளன. அதில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள 32 அரசு மாதிரிப் பள்ளிகள், 2381 அங்கன்வாடிப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் தொடக்கப்பள்ளிகளில் 2131 குழந்தைகள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 150 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். விஜயதசமி தினத்தில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,131 குழந்தைகள் புதிதாக சோ்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறைற அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த செப்.30-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. எனினும், அக்டோபா் 8-ஆம் தேதி விஜயதசமி நாளில் மட்டும் மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ள கல்வித்துறைற அனுமதி வழங்கியது. அதன்படி விஜயதசமி அன்று மாநிலம் முழுவதுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மழலையா் வகுப்புகளில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. அக்.8-ஆம் தேதி நிலவரப்படி 3 வயது பூா்த்தியான குழந்தைகள் மழலையா் வகுப்பிலும், 5 வயதான குழந்தைகள் 1-ஆம் வகுப்பிலும் சோ்க்கப்பட்டனா். இதையடுத்து, மாநிலம் முழுவதுள்ள அரசு, அரசு உதவி பள்ளிகளில் மழலையா் மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் ஒரே நாளில் 2,131 குழந்தைகள் புதிதாகச் சோ்ந்துள்ளனா். இதில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 150 போ் சோ்ந்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பள்ளிகளில் விஜயதசமி நாளில் 460 மாணவர்கள் சேர்க்கை: மாநகராட்சி அதிகாரி தகவல் விஜயதசமியை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 460க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் விஜயதசமி அன்று சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று கல்வித் துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் பாரதிதாசன் தலைமையில் சிறப்பு மாணவர் சேர்க்கை முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 119 மழலையர் பள்ளிகள், 91 தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 460க்கு மேறப்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு வகுப்பில் சேர்ந்தனர். இதில் எஸ்கேஜியில் 261 பேரும், யூகேஜியில் 54 பேரும், 1ம் வகுப்பில் 55 பேரும், 2ம் வகுப்பில் 25 பேரும், 3ம் வகுப்பில் 21 பேரும், 4ம் வகுப்பில் 22 பேரும், 5ம் வகுப்பில் 10 பேரும், 6ம் வகுப்பில் 8 பேரும், 7ம் வகுப்பில் 2 பேரும், 8ம் வகுப்பில் ஒருவர், 9ம் வகுப்பில் ஒருவர் உள்ளிட்ட 460 மாணவ, மாணவிகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள சென்னை பள்ளிகளில் சேர்ந்தனர். இவர்களுக்கு ஆசிரியர்கள் அரிசியில் ‘அ’ எழுத வைத்து இனிப்பு வழங்கி வகுப்பறையில் அமரவைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews