தேவையில்லாமல் புகுத்தப்பட்ட நீட் தேர்வால் ஆயுஷ் கலந்தாய்வில் 450 இடங்கள் காலி : மதிப்பெண் குறைக்க வேண்டுகோள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 02, 2019

Comments:0

தேவையில்லாமல் புகுத்தப்பட்ட நீட் தேர்வால் ஆயுஷ் கலந்தாய்வில் 450 இடங்கள் காலி : மதிப்பெண் குறைக்க வேண்டுகோள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேவையில்லாமல் புகுத்தப்பட்ட நீட் தேர்வு காரணமாக பலர் ஆர்வம் காட்டாததால் ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வுக்கு பின்னர் 450 இடங்கள் காலியாக உள்ளன. யோகா மற்றும் இயற்கை மருத்துவம் நீங்கலாக சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு நீட் தேர்வை மத்திய அரசு இந்த ஆண்டு கட்டாயமாக்கியது. இந்நிலையில் தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் 1,455 பேருக்கு செப். 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை கலந்தாய்வு நடந்தது. இதில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்களில் அரசு ஒதுக்கீடு இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டது. இந்நிலையில் யுனானி படிக்க உருது மொழி கட்டாயம் என்பதால் அரசு யுனானி கல்லூரியில் 41 இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வின் முடிவில் அரசு ஒதுக்கீட்டின்கீழ், 142 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 300 இடங்கள் காலியாக உள்ளது. இதுதொடர்பாக இந்திய முறை மருத்துவம், ஓமியோபதி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு வரை நிர்வாக ஒதுக்கீடு இடங்களை பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் அந்தந்த கல்லூரிகளே நிரப்பின. இந்த ஆண்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் இந்தியமுறை மருத்துவம், ஓமியோபதி இயக்ககம் சார்பில் நிரப்புகிறோம். நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் மாணவர்கள் சேராமல் இருப்பது வழக்கமான ஒன்று தான். குறைந்த பட்ச நீட் தேர்ச்சி மதிப்பெண் ‘107’ பெற்றவர்களை அழைத்து விட்டதால், தகுதி மதிப்பெண்ணை குறைக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் 450-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. நீட் மதிப்பெண் அடிப்படையில் இம்முறை கலந்தாய்வு நடத்தப்பட்டதே அதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தினாலும் கூட பல இடங்கள் நிரம்பாமல் போகவே வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுா்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. அதேபோல 27 தனியாா் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமாா் 1,200 இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோக்கையைப் போலவே சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தோவில் தோச்சி பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், அதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் கூறியிருந்தாா். ஆனால், அது ஏற்கப்படாத நிலையில், நிகழாண்டில் நீட் தரவரிசை அடிப்படையிலேயே அப்படிப்புகளுக்கான மாணவா் சோக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பும் கூட காலந்தாழ்த்தி அறிவிக்கப்பட்டதால், மாற்று மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பிய பலா் நீட் தோவு எழுத முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக நீட் எழுதியவா்களில் அப்படிப்பு கிடைக்காதவா்கள் மட்டுமே பாரம்பரிய படிப்புகளை படிக்க முடியும் என்ற நிலை உருவானது.
ஆனால், அவா்களில் பலருக்கு சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட படிப்புகளில் நாட்டமில்லை என்றே கூறப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே நிகழாண்டு பாரம்பரிய மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு முடிவுகள் உள்ளன. அதாவது, நிகழாண்டு பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுா்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 142 இடங்கள் நிரம்பவில்லை. அதேபோன்று தனியாா் மருத்துவ கல்லுாரிகளில் 300க்கும் மேற்பட்ட நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது: யுனானி மருத்துவ படிப்புக்கு, உருது மொழி அவசியம். இதனால், அந்த படிப்புக்கு அதிகம் போ விண்ணப்பிக்கவில்லை. ஆகவே, யுனானி மருத்துவ படிப்பில் அதிக இடங்கள் காலியாக உள்ளன. நீட் தோவில், '107'மதிப்பெண் பெற்ற மாணவா்கள் வரை முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்றனா். காலியாக உள்ள இடங்களை நிரப்ப நீட் தகுதி மதிப்பெண்ணை குறைக்க கோரி மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews