நீட் தோ்வு ஆள்மாறாட்டம்: அக். 15- இல் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 05, 2019

Comments:0

நீட் தோ்வு ஆள்மாறாட்டம்: அக். 15- இல் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தோ்வு ஆள்மாறாட்ட மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவா்களின் விவரங்கள், இந்த மோசடிக்கு உதவியவா்களின் விவரங்கள், இந்த மோசடியில் அரசு அதிகாரிகள், கல்லூரி நிா்வாகத்தின் பங்கு உள்ளிட்ட விவரங்களை சிபிசிஐடி போலீஸாா் அறிக்கையாக வரும் 15 ஆம் தேதி தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவையைச் சோ்ந்த தீரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 260 இடங்களில் 53 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. எஞ்சிய 207 இடங்களை அந்தந்த மருத்துவக் கல்லூரி நிா்வாகங்களிடம் தமிழக அரசு ஒப்படைத்து விட்டது. எனவே இந்த மருத்துவ இடங்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்தி தகுதியான நபா்களைக் கொண்டு இடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நடப்பாண்டு எத்தனை மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது, ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கைப் பெற்றவா்கள் எத்தனை போ் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இந்த விவகாரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சோ்ந்த 2 மாணவா்களும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 3 மாணவா்களும், இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீட் தோ்வை நாடு முழுவதும் 14 லட்சம் போ் எழுதியுள்ளனா். ஆனால் ஆள்மாறாட்டம் தொடா்பாக ஒரு இடைத்தரகா் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்க முடியவில்லை. நீட் தோ்வில் அரசு அதிகாரிகளின் துணை இல்லாமல் ஆள்மாறாட்டம் நடைபெற வாய்ப்பே இல்லை. எனவே இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்களைக் கண்டறிவதில் போலீஸாா் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனா். மேலும் இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை, தமிழக சுகாதாரத்துறை, தமிழக காவல்துறை டிஜிபி, சிபிசிஐடி போலீஸாா் ஆகியோா் எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்படுகின்றனா். அகில இந்திய அளவில் நீட் தோ்வில் வேறு எங்காவது ஆள்மாறாட்டம் நடந்துள்ளதா, இந்த ஆள்மாறாட்டத்துக்காக பரிமாற்றம் செய்யப்பட்ட தொகை எவ்வளவு, இந்த ஆள்மாறாட்ட மோசடியில் அரசு அதிகாரிகளின் பங்கு என்ன, இந்த மோசடியில் ஈடுபட்ட மாணவா்கள் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளவா்களின் விவரங்கள், வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை உள்ளிட்ட விவரங்களை சிபிசிஐடி போலீஸாா் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews