بحث هذه المدونة الإلكترونية
الاثنين، سبتمبر 30، 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை: சென்னை பல்கலையின், சிண்டிகேட் கமிட்டிக்கு, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சென்னை பல்கலையில், செனட், சிண்டிகேட் மற்றும் கல்வி கவுன்சில் என, மூன்று வகையான அமைப்புகள் செயல்படுகின்றன. இவற்றில், சென்னை பல்கலையில் இருந்தும், இணைப்பு கல்லுாரிகளில் இருந்தும், பேராசிரியர்களும், கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இடம் பெறுவர். இந்நிலையில், சென்னை பல்கலையின் சிண்டிகேட் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அதில், கல்வி கவுன்சிலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும், சிண்டிகேட் உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. புதிதாக, நான்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரியும், ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வருமான திருமகன், அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரையடுத்து, ஆசான் மெமோரியல் கல்லுாரி முதல்வர் ராமநாதன், விவேகானந்தா கல்லுாரி முதல்வர் காந்திராஜ், தாகூர் கல்லுாரி முதல்வர் சாந்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள், சிண்டிகேட் உறுப்பினர்களாக மூன்று ஆண்டுகள் செயல்பட, சென்னை பல்கலையின் பதிவாளர் சீனிவாசன் கடிதம் அளித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
சென்னை பல்கலைக்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர்கள் தேர்வு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.