👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நீட் தேர்வு என்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, விடைத்தாள் நகல்களை தர மத்திய அரசு முன் வராததன் மூலம், அதன் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாக, கருத்து தெரிவித்துள்ள கல்வியாளர்கள்....மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த மதிப்பெண்கள் சரியானதுதானா என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியாத நிலை இருப்பதால், நியாயம் கேட்டு நீதிமன்றத்திற்கு கூட செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தேசிய தேர்வு முகமை வழங்கக்கூடிய மதிப்பெண்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கும் மாணவர்கள் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த சோகத்திற்குரியது என தெரிவித்துள்ள கல்வியாளர்கள்.... இந்த விஷயத்தில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U