மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 09, 2019

மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கரூர், அரசு மருத்துவக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.கரூர் அருகே, கொளந்தானுாரில், மருத்துவக் கல்லுாரி கட்டப்படுகிறது. பிரமாண்டமான கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மருத்துவக் கல்லுாரியின், நிர்வாக அலுவலக கட்டடம் கட்டும் பணி நிறைவு பெற்று தயாராக உள்ளது.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டில், 150 மாணவ - மாணவியர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான ஒப்புதலை, இந்திய மருத்துவ கவுன்சில் நேற்று முன்தினம் இரவு வழங்கியது. மருத்துவ கல்லுாரி டீன், ரோஸி வெண்ணிலா கூறுகையில், ''கரூர் மருத்துவக் கல்லுாரி, நடப்பு ஆண்டு முதல் செயல்படும். அதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியுள்ளது. கவுன்சிலிங்கில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி பெயர் இடம் பெறும்,'' என்றார். கரூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால் நடப்பு கல்வி ஆண்டில் இங்கு மாணவர்களின் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதற்கட்டமாக 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்க பெறும் மொத்த மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டின் படி தமிழகத்தில் 22 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. அவற்றின் மூலம் தமிழகத்திற்கு 2900 மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு 100 கூடுதல் இடங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்திற்கு மொத்தம் 250 மருத்துவ படிப்புக்கான இடங்கள் கூடுதலாக கிடைக்கப்பெற்றுள்ளன. மதுரை மருத்துவ கல்லூரியில் 95 கூடுதல் இடங்களுக்கான கோரிக்கை நிலுவையில் உள்ளது. தமிழ்கத்தில் அடுத்தடுத்து புதிய அரசு மருத்துவ கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூர், ஊட்டி, ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. திருவள்ளூரிலும் காஞ்சிபுரத்திலும் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட அனுமதி கேட்டு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews