கல்லுாரியில், 'ராகிங்' டீன் விசாரணை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 29, 2019

கல்லுாரியில், 'ராகிங்' டீன் விசாரணை!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களின் ஆடைகளை களைந்து, 'ராகிங்'கில் ஈடுபட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.இக்கல்லுாரியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, மூன்றாமாண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள், 10 பேர், சிவகங்கை, தேவகோட்டை, கிருஷ்ணகிரியை சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள், நான்கு பேரின் ஆடைகளை களையச் செய்து, ராகிங்கில் ஈடுபட்டனர்.
சீனியர்கள் தாக்கியதில் தேவகோட்டை மாணவர் பலத்த காயமுற்றார். பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். பெற்றோர், மருத்துவக் கல்லுாரி டீன் சந்திரிகாவிடம், புகார் அளித்தனர்.சந்திரிகா கூறியதாவது:பெற்றோர் அளித்த புகாரின்படி, குழு அமைத்து விசாரிக்கிறேன். ராகிங்கி-ல் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள், உறுதியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர். அவர்களின் பெயர் பட்டியல், கல்லுாரி நோட்டீஸ் போர்டில் ஒட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews