பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு சிலை பெருமை சேர்த்த மக்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 17, 2019

பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு சிலை பெருமை சேர்த்த மக்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பிறந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் துவங்க 1960ல் நிலத்தை தானமாக வழங்கி கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா இனாம்கரிசல்குளம் மக்களால் முதலாளி என அழைக்கபட்டவர் சர்க்கரையப்பநாடார். தன் வாழ்வில் உயர்கல்வி பெறாமல் பெருநிலக்கிழாராக திகழ்ந்த இவர் அப்போது நீதிகட்சியின் நிர்வாகியாக இருந்தார். ஆனாலும் காமராஜரின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தார். காமராஜரின் அன்பால் ஈர்க்கபட்ட இவர் தன்னுடைய கிராமத்து மாணவர்கள் எளிதில் கல்வி பெறும் வகையில், பள்ளி அமைக்க தன்னுடைய சொந்த இடத்தை தானமாக வழங்கினார். இதனால் 1961ல் முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டபட்டு, 1965ல் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கிருஷ்ணசாமி நாயுடு முன்னிலையில், ராமநாதபுரம் கலெக்டராக இருந்த நரசிம்மனால் இப்பள்ளி திறக்கப்பட்டது.
இதனால் இனாம்கரிசல்குளம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமபுற மாணவர்கள் கல்வி பெற்று, இன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களின் வாரிசுகளும் இன்று உயர்கல்வி பெற்று தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வசிக்கின்றனர். கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்தி தந்த, சர்க்கரையப்பநாடாருக்கு, மக்களின் சார்பில் பள்ளியின் வாசலில், 6 அடி உயர கற்சிலையை 1980ல் அமைத்து, அதனை அப்போதைய எம்.எல்.ஏ.தாமரைக்கனியால் திறந்து வைத்து பெருமை சேர்த்துள்ளனர் இனாம்கரிசல்குளம் பொதுமக்கள். இன்றும் இச்சிலை பள்ளி மாணவர்கள் வணங்குமளவிற்கு கம்பீரமாக இருப்பது, நாட்டிற்கு உழைக்கும் நல்லவர்களை உருவாக்கும் அடையாள சின்னமாக விளங்குகிறது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews