தருமபுரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் நிகழாண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சி மற்றும் ஜெயின் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு ஆன்லைனில்
http://scholarship.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உரிய காலத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்