சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 18, 2018

சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு

தருமபுரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் நிகழாண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சி மற்றும் ஜெயின் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு ஆன்லைனில் ‌h‌t‌t‌p://‌s​c‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உரிய காலத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews