நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது.
மே மாதம் நடைபெற்று முடிந்த நீட் தேர்வின் முடிவுகள், கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா, 676 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 12வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்தார்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான
கலந்தாய்வு நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில், கீர்த்தானா இன்று அதில் கலந்துகொண்டார். அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது. இந்த முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.