பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் 8 பேர் பணியிட மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 03, 2018

Comments:0

பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் 8 பேர் பணியிட மாற்றம்


பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 8 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த மனோகரன் ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.

அதனால், கூடுதல் பொறுப்பாக திருவள்ளூர்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச் செல்வி என்பவர் சென்னை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ், மதுரைக்கும், நீலகிரி செந்தில்வேல் முருகன், திருநெல்வேலிக்கும், சிவகங்கை ஆஞ்சலோ இருதயசாமி காஞ்சிபுரத்துக்கும், கரூர் கணேஷ்மூர்த்தி சேலத்துக்கும், மதுரை மாரிமுத்து திருவாரூருக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் பாண்டியராஜா சென்னை தொடக்க கல்வி இயக்கக இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews